11ஆம் வகுப்பு மாணவி 16வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

சென்னை கொரட்டூரில் வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்வதில்லை என பள்ளி ஆசிரியர், பெற்றோரிடம் கூறியதால், 11ஆம் வகுப்பு மாணவி 16வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 16வது மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து வந்த கொரட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தற்கொலை செய்து கொண்டது தனியார் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவி வைஜெயந்தி என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என்றும், வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்வதில்லை என்றும் பள்ளி ஆசிரியர் மாணவியின் தந்தையான பாஸ்கரனிடம் தொலைபேசியில் புகார் தெரிவித்தது தெரியவந்தது.

இதனால், பெற்றோர் மீதுள்ள பயம் காரணமாக வழியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில் இருந்து மாணவி வைஜெயந்தி குதித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

 

இதனிடையே, மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக, பள்ளி ஆசிரியர், சக மாணவர்கள் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Exit mobile version