டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு மேலும் 2 பேர் கைது

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில், மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்டபான வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், தேர்வு எழுதியவர்கள், இடைத்தரகர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சியில் தட்டச்சராக பணியாற்றும் மதுராந்தகத்தைச் சேர்ந்த மாணிக்கவேல், ஏ.பி.டி. பார்சல் வாகனத்தின் ஓட்டுநரான மதுரை  திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தேர்வாணையத்தின் ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் மற்றும் முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார் ஆகியோருக்கு உடந்தையாக இருந்தவர்கள் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version