டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சரணடைந்த 4 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேரை, 5 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சம்பத் ஆகியோர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி சரணடைந்தனர். அதே போல், முறைகேட்டில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ்டவுன் விரைவு நீதிமன்றத்திலும், டிஎன்பிஎஸ்சி தேர்வர் பிரபாகரன் எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்திலும் கடந்த 14ஆம் தேதி சரணடைந்தனர். இந்நிலையில், நான்கு பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Exit mobile version