இம்மாத இறுதிக்குள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

இம்மாத இறுதிக்குள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்”  என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு செய்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி பல லட்சக்கணக்கான தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை எழுதியிருந்தனர். ஆனால் இந்த அரசு இன்னும் அவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடாமல் அலைக்கழித்து வந்தது. கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. தேர்வர்கள் அனைவரும் கவலையிலும் அதிருப்தியிலும் இருந்து வருகிறார்கள்.Tamil Nadu Public Service Commission

இதன் விளைவாக சில தினங்களாக தேர்வர்கள் அரசுக்கும் டிஎன்பிஎஸ்சி அமைப்புக்கும் தங்களது கண்டனங்களை சமூகவலைதளங்களில் கூறி வந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று டிவிட்டரில் #WeWantGroup4results என்ற ஹேஸ்டாக்கை பரப்பினர். இது போன்ற அழுத்தத்தின் காரணமாக டிஎன்பிஎஸ்சி தற்போது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் இந்த மாதம் இறுதி வெளியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Exit mobile version