இன்று தொடங்குகிறது டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடக்கும் குரூப்-1 முதன்மை தேர்வு இன்று முதல் துவங்குகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு இன்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 95 தேர்வுக்கூடங்களில் தேர்வு காலை நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முதன்மை தேர்வினை எழுத இருக்கின்றனர். அதன்படி 9 ஆயிரத்து 441 தேர்வர்களுக்கு அனுமதிச்சீட்டுகள் தேர்வாணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வினை கண்காணிக்க 95 முதன்மைக் கண்காணிப்பாளர்களும் மற்றும் 950 தேர்வர்களுக்கு 945 கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், அனைத்துத் தேர்வுக்கூடங்களையும் கண்காணிக்கும் வகையில் அதிகாரிகள் தலைமையில் 15 பறக்கும்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version