தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரம்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நாடளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் கவனம் செலுத்திய அரசு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டு வருகிறது. அதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலில் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளே உள்ளாட்சி தேர்தலுக்கும் பின்பற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.

மாநில தேர்தல் ஆணையம் தயாரிக்கும் வாக்காளர் பட்டியலுக்கான தொழில்நுட்ப பணிகளுக்கு தேசிய தகவலியல் மையம் உதவி செய்து வருவதாகவும், விரைவில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட இருப்பதாகவும் சென்னை மாநகரட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

Exit mobile version