பனை மரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : பனை தொழிலாளர்கள்

பனை மரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உசிலம்பட்டி பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனையில் உள்ள அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயனளிப்பதாக உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்பு பனை நுங்கு 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்தாலும், பனை நுங்கு கிடைப்பதற்கு அரிதாக உள்ளது. இதற்கு பனை மரம் அதிகம் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.

மருத்துவ பயன் கொண்ட பனை நுங்கு, பதநீரை அளிக்கும் பனை மரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உசிலம்பட்டி பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version