25 ஊராட்சி செயலர்களைப் பதிவுறு எழுத்தர்களாக நியமிக்க உத்தரவு

நகராட்சி, மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளின் 25 செயலர்களை, அந்தந்தப் பகுதிகளில் பதிவுறு எழுத்தர்களாக நியமிக்க உத்தரவிட்டுத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, பல ஊராட்சிகள் அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில் நகர்ப் பகுதிகளில் இணைக்கப்பட்ட ஊராட்சிகளின் செயலர்கள் தங்களுக்குப் பணி கேட்டுக் கோரிக்கை வைத்திருந்ததினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 25 ஊராட்சிகளின் செயலர்களை அந்தந்த நகராட்சி, மாநகராட்சிகளில் பதிவுறு எழுத்தர்களாக நியமிக்க, நகராட்சி நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டு, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Exit mobile version