தீபாவளியையொட்டி, மூன்று நாட்களுக்கு விடுமுறை: அரசாணை வெளியீடு

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளிட்டுள்ளது.

இந்த வருடம் தீபாவளி ஞாயிறு அன்று வருகிறது. ஞாயிறு எப்போதும் விடுமுறை என்பதால், தீபாவளிக்கு முந்தைய நாளும், அடுத்த நாளும் விடுமுறை அளிக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 26-ந் தேதி விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடும் விதமாக தீபாவளிக்கு மறுநாளான, அக்டோபர் 28-ந் தேதி விடுமுறை அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மக்களின் கோரிக்கையை ஏற்று, தீபாவளிக்கு 3 நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version