தமிழக அரசு குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது

குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சாவடி பகுதியில் தமிழக அரசு அறிவித்த குடிமராமத்து திட்டத்தின் மூலம் கிராம மக்களே குளத்தை தூர்வாரி, அப்பகுதி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இனிவரும் காலங்களில் மழை நீரை சேமித்து, நீர் ஆதாரத்தை பெருக்கும் முயற்சியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குளத்தில் சேகரிக்கப்படும் மண் உரமாக பயன்படுவதால், வரும் காலங்களில் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசிசுக்கு கிராம மக்கள் தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Exit mobile version