சனிக்கிழமைகளிலும் மீன் கடைகள், இறைச்சிக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு!

சனிக்கிழமைகளிலும் மீன் கடைகள், இறைச்சிக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, ஞாயிற்றுக் கிழமையன்று மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் அடைக்கப்படுவதால், சனிக்கிழமை அன்றே அவைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிகின்றனர்.

இதன் காரணமாக, கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக் கூடும் நிலை ஏற்பட்டது. இதனால், சனிக்கிழமைகளிலும் மீன் கடைகள், இறைச்சிக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version