தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் நெடுந்தீவு அருகே நேற்றிரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இரண்டு படகுகளில் இருந்த ஏழு மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். ஏழு பேரும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

Exit mobile version