காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்க, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக்க சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டு வரவும், அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version