மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திதிபோஜன்

திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி தனியார் பள்ளியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திதி போஜன் நிகழ்ச்சி நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு கடந்த அக்டோபர் 2018 முதல் 2019 அக்டோபர் வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வக்கம்பட்டி தனியார் பள்ளியில் திதிபோஜன் என்கிற உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர், அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.

Exit mobile version