ஓசூரில் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட வாழை அமோக விளைச்சல்

ஓசூரில் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட வாழை அமோக விளைச்சல் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் திசு வளர்ப்பு முறையில் 10க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். வாழை சாகுபடி செய்ய ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

திசு வளர்ப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்ட வாழைகள், நல்ல விளைச்சல் அடைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஓசூர் பகுதி வாழை தங்களுக்கு சந்தை ஒன்றை அரசு ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version