திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் – அ.தி.மு.க. வேட்பாளர் நாளை அறிவிப்பு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகையை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று கூறினார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அவர் கூறினார்.

Exit mobile version