பறவைகளின் புகலிடமாக விளங்கும் திருப்பூர் மூளிக்குளம்

திருப்பூர் அருகேயுள்ள மூளிக்குளத்தில் படகு இல்லம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம், மண்ணரை அடுத்த மூளிக்குளத்தில் ஆண்டின் பெரும்பாலான நாட்களில், நீர் நிரம்பியிருக்கிறது. இதனால் அப்பகுதியில் மூளிக்குளம் முக்கிய நீர் ஆதாரமாகவும்., பல்வேறு பறவைகளின் புகலிடமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் மூளிக்குளத்தின் கரைகளை பலப்படுத்தி பொதுமக்கள் செல்ல பசுமை நடைப்பாதை அமைக்க வேண்டும் எனவும், குளத்தை ஆழப்படுத்தி படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version