திருப்பூர் குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை

திருப்பூர் குமரனின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு குமரன் பிறந்த வீட்டில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் பிறந்த நாள் 2015ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள திருப்பூர் குமரன் பிறந்த வீட்டில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சங்ககிரி அருகே கால்நடை பூங்கா விரைவில் தொடங்கப்படும் எனவும் நாட்டு இன கோழி பாதுகாப்பு மையம் 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version