திருப்பூர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் 2 லட்சம் சேதம்

வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் என்பவர் பழைய சாக்குப் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கேன்கள் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு சொந்தமான குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக பல்லடம் காவல் நிலையத்திற்கும், திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தநிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்ததால் சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version