திருப்பத்தூர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதல் குறைதீர்க்கும் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் குறைதீர்க்கும் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தைப் பிரித்துப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் மனுக்களை அளித்தனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைப்பெறும் என அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் மனுக்கள் வாங்குவது நிறுத்தப்பட்டது.

Exit mobile version