திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா பணிகள்: அமைச்சர்கள் நேரில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விழா அரங்கம் அமைக்கும் பணியினை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா வருகின்ற 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளார். திருப்பத்தூர் தனியார் பள்ளி மைதானத்தில் விழா அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் மற்றும் வருவாய்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். இதே நாளில் ராணிப்பேட்டை மாவட்டமும் துவக்கி வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், புதிய மாவட்ட தொடக்க விழாவானது சம்பர்தாய விழாவாக இல்லாமல் ஏழை, எளிய மக்களின் வாழ்கையில் விளக்கேற்றி வைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க விழாவாக இருக்கும் என தெரிவித்தார்.

Exit mobile version