திருப்பதி, ஏழுமலையான் கோவிலில் சர்வ பூபால வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான நேற்று சர்வ பூபால வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை பல்வேறு வாகனங்களில் உற்சவர் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான நேற்று இரவு சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தன் நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். ஏழுமலையான் வாகன சேவையை காண நான்கு மாட வீதியின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷங்களுக்கிடையே சுவாமி வாகன சேவை நடைபெற்றது. பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Exit mobile version