திருப்பதி தேவஸ்தானத்திடம் 1,381 கிலோ தங்கம் ஒப்படைப்பு

சென்னை அருகே தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்து 381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் கடந்த 17 ஆம் தேதி உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஆயிரத்து 381 கிலோ தங்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யபட்டது. பின்னர் பூந்தமல்லி கருவூலத்தில் அந்த தங்கம் ஒப்படைக்கபட்டது. இந்த தங்க கட்டிகள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்களை அளிக்குமாறு வருமான வரித்துறை தேவஸ்தானத்திற்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதை அடுத்து, தங்க கட்டிகள் திருப்பதி தேவஸ்தான தலைமை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Exit mobile version