நெல்லையில், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு

பாபநாசம் அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பாபநாசம் அணை முழு கொள்ளவை எட்டியதால், அணையில் இருந்து சுமார் 16 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், சொரிமுத்து அய்யனார் கோயில், அகஸ்தியர் அருவிக்கு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version