திருநெல்வேலி பெயர் வர காரணமான நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு!

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நடைபெறும் தை பூசத்திருவிழா, கடந்த 26 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், நான்காம் நாள் திருவிழாவான, நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்வு, பிப்ரவரி 4-ம் தேதி தைப்பூச மணடபத்தில் நடைபெற உள்ளது. அதன்பின் 6-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறும்.

Exit mobile version