திருத்தணி முருகன் கோவில் மூலஸ்தனத்தில் புகுந்த குரங்குகள் அட்டூழியம்!

திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் . இந்நிலையில் பக்தர்கள் வழக்கம்போல சாமி தரிசனம் செய்யவந்ததையடுத்து மலைப்பகுதியில் உள்ள குரங்குகள் கோவில் மூலஸ்தளத்தில் புகுந்து அட்டூழியத்தில ஈடுபட்டன. இதனால் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் அலறடித்து ஓட்டம் பிடித்த நிலையில் குரங்குகளை விரட்டுவதற்கு கோவில் ஊழியர்கள் போராடினர். குரங்குகள் அட்டகாசத்தினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முருகனுக்கு செய்ய வேண்டிய சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நிறுத்தப்பட்டதாக அர்சகர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version