வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்

தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பண மதிப்பீட்டு விஷயத்தில் மக்கள் நன்மை பெற்றது உண்மை என்றார். பாஜக சார்பில் விழா கொண்டாடாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

17 இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மூன்று இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றதை சுட்டிக் காட்டிய திருநாவுக்கரசர், எங்கிருந்து மோடி அலை வீசுகிறது என்று வினவினார். மோடியின் செல்வாக்கு குறைந்து விட்டது என்றும், ராகுல் காந்தியின் செல்வாக்கு கூடிவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

Exit mobile version