திருப்பதியில் சித்ரா பௌர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான், தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.

கோயில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வந்து அருள்பாலித்தார்.

அப்போது பக்தர்கள் பக்தி கோஷமிட்டு சுவாமியை தரிசித்தனர்.

கொரோனா இரண்டாம் அலை பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆந்திரா மற்றும் அண்டை மாநிலங்களில் ஊரடங்கு அமுலில் உள்ளதால் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version