திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உதயமார்த்தாண்ட அபிஷேகம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடி கிருத்திகை திருநாள் அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து  பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Exit mobile version