கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்த இம்மாதம் 30ம் தேதிவரை மின்வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் கஜா புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாவட்டங்களில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புயல் பாதித்த மாவட்டங்களில் அபராதம் இன்றி, மின்கட்டணம் செலுத்துவதற்கு இம்மாதம் 30ம் தேதி வரை தமிழ்நாடு மின்வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்மாதம் 15ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதம் இன்றி 30ம் தேதிவரை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version