மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் ஒருவரின் டிக்டோக் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த டிக்டோக் பிரபலம் ஃபைசல் சித்திக். சமூக வலைதளமான டிக்டோக்கில், சித்திக்கை ஏராளமானோர் பின்பற்றி வரும் நிலையில், பெண் ஒருவர் மீது ஆசிட் வீசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அந்த வீடியோவில் சித்திக் ஆசிட் வீசுவது போலவும், அதனால் ஏற்பட்ட காயத்தை போல, முகத்தில் ஓவியம் வரைந்த பெண்ணும் இடம்பெற்றுள்ளனர். இந்த வீடியோவுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா, சர்ச்சைக்குரிய வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என டிக்டோக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், சித்திக்கின் கணக்கை நீக்குவது அவசியம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version