குஜராத் மாநில தலைமைச் செயலக வளாகத்துக்குள் நுழைந்த சிறுத்தை பிடிபட்டது

குஜராத் மாநில தலைமைச் செயலக வளாகத்துக்குள் நுழைந்த சிறுத்தை பிடிபட்டுள்ளது. காந்திநகரில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலக வளாகத்துக்குள் இன்று அதிகாலையில் ஒரு சிறுத்தை புகுந்தது. இது அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களில் சிறுத்தை வருவது பதிவானது.

தகவலின்பேரில் அங்குவந்த வனத்துறையினர் தலைமைச் செயலக வளாகத்தில் தேடுதல்வேட்டை மேற்கொண்டனர். சிறுத்தை பதுங்கியிருப்பதை கண்டுபிடித்த வனத்துறையினர், பின்னர் கூண்டு வைத்துப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து சிறுத்தை வாகனத்தில் ஏற்றப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Exit mobile version