டிக் டாக், முகநூல் மூலம் பழகி பல பேரை மோசடி செய்த இளம்பெண் கைது!

டிக் டாக் மற்றும் முகநூல் மூலம் பழகி, மதுரையை சேர்ந்த இளைஞரிடம் 96 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்த இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த இளைஞர் ராமச்சந்திரன் என்பவர், டிக் டாக் மற்றும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்ட திருப்பூரைச் சேர்ந்த துர்கா தேவி என்ற பெண்ணுக்கு 96 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளார். நீண்ட நாட்களாக பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் ராமச்சந்திரன், மோசடி செய்த பெண்ணின் மீது எஸ்.எஸ் காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், திருப்பூர் ஆலங்காடு பகுதியில் பதுங்கியிருந்த துர்கா தேவியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், டிக் டாக் மற்றும் முகநூல் மூலம் பல பேரை ஏமாற்றி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

Exit mobile version