தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் புதுவை, மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசஸ் வெப்பம் பதிவாகக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடல், கேரளா, கர்நாடகா, கச்சத்தீவு, கோவா ஆகிய பகுதிகளில் மணிக்கு 50கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version