வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது…

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வரண்டு காணப்பட்டதால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மும்முணி, பாதிரி, தெள்ளார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்த மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version