நாகை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைநாகப்பட்டினத்தின் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பகலில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நாகப்பட்டினம், உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தற்போது சம்பா சாகுபடி துவங்கி இருப்பதால், பயிர்களுக்கு நீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version