தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று காலை எட்டரை மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மூன்று சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் ஆர்.எஸ். மங்கலம் ஆகிய பகுதிகளில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version