தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 5ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 5ந் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் கிழக்கு திசைக் காற்றும் மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழகம் இருப்பதால், இங்கே மழை பொழிவதாக  வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.   எனவே, வரும் 5ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில்  லேசானது முதல் மிதமான மழை பரவலாக தொடர  வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அந்த மையம் கூறியுள்ளது.  

Exit mobile version