தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் சில இடங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு யையம் தெரிவித்துள்ளது .

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி கோவை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, புதுவை, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version