திருத்துறைப்பூண்டி அருகே மணல் திருட்டில் பயன்படுத்திய 3 வாகனங்கள் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி அருகே மணல் திருட்டில் பயன்படுத்திய 3வாகனங்களை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நல்லூர், கோட்டகம் பகுதியில் ராகவன் மற்றும் விஜயராகவன் என்பவர்களுக்கு சொந்தமான வயலில் நிலத்தடிநீர் குறையும் வகையில், அனுமதியை மீறி 6 அடி ஆழம் வரை மணல் எடுப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினரைக் கண்டு, அங்கே மணல் எடுத்தவர்கள் 3 பெரிய பொக்லைன் இயந்திரங்களை விட்டு விட்டு தப்பியோடி விட்டனர் .இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Exit mobile version