வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு

புதுச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை வேட்பாளர்களோ அல்லது முகவர்களோ கண்காணிக்கலாம் என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, மோதிலால் ஆண்கள் தொழில்நுட்ப கல்லூரிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி அருண், தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் 24 மணி நேரமும் அங்கேயே தங்கி பார்வையிடலாம் என்றார்.

Exit mobile version