கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை மூவாயிரத்து 828 ஆக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை மூவாயிரத்து 828 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது. சீனாவில் நேற்று 22 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 109 நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை மூவாயிரத்து 828 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை தொடர்ந்து இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 133 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version