இருவேறு பகுதிகளில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற தீவிரவாதிகள் ஊடுருவலை முறியடிக்கும் முயற்சியில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தின் இமாம் சாஹேப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். பந்திப்போராவின் ஹஜ்ஜின் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளில் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் சில தீவிரவாதிகள் அப்பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுவதால் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிகளில் தொடர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version