துப்பாக்கிச்சண்டையில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் பலியானார்கள்.

காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தரபானி செக்டாரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் தடுக்க முயன்றது.ஊடுருவல்காரர்களை சரணடையுமாறு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்த நிலையில் அவர்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த சண்டையில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய இருவர் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ வீரர்கள் தரப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குல்காம் மாவட்டத்தில் உள்ள லரூ பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்போது வெடிகுண்டு வெடித்ததில் பொதுமக்கள் 6 பேர் பலியானார்கள்.

Exit mobile version