அயனாவரத்தில் இருசக்கர வாகனம் திருடு போன வழக்கில் மூன்று பேர் கைது

சென்னை அயனாவரத்தில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மாயமான வழக்கில்  மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவர் தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த போது மாயாமானது,  இதையடுத்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் நடத்தி வந்த விசாரணையில், பொருள் செல்வன், மணி, விக்னேஷ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version