இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான மூன்று முக்கிய நபர்கள் சுட்டுக்கொலை

இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான மூன்று முக்கிய நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஒருவாரமாக அங்கு அசாதாரண நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், கல்முனை பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. தொடர் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குண்டுவெடிப்புக்கு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் 2 மகன்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முகமது சாதிக் அப்துல் ஹா மற்றும் முகமது சாகித் அப்துல் ஹா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version