கந்துவட்டி கொடுமையால் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது

கும்பகோணத்தில், கந்துவட்டி கொடுமையால் பாலிடெக்னிக் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் பானாதுறை பத்து கட்டு தெருவில் வசிப்பவர் சிவசுப்பிரமணியன். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் மற்றும் அவரது சகோதரர் பாலகுரு ஆகியோரிடம் இருந்து 3 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி இருந்தார். இதற்காக வட்டியுடன் அவர் பணத்தை செலுத்தி உள்ளார். இருப்பினும் கந்து வட்டி வசூலிப்பதாக கூறி, அசல் பணமான 3 லட்சத்தை தருமாறு கேட்டு செந்தில் தரப்பினர் தகராறு செய்துள்ளனர். இதனால் அவமானம் தாங்காமல் சிவசுப்பிரமணியன் விஷம் குடித்துள்ளார். இந்தநிலையில், மீண்டும் வந்து தகராறு செய்த செந்தில் தரப்பினரிடம் சிவசுப்பிரமணியனின் மகன் அருண் தட்டிகேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. பலத்த காயமடைந்த அருண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version