தொடர் வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனத் திருட்டுகள் அதிகமாக நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். திருச்சுழி அருகே இலுப்பையூரிலும் தம்பதியை வழிமறித்து பணம், நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து திருச்சுழி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் சசிதரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொள்ளை கும்பலை சேர்ந்த மூவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version