வங்கி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு கொள்ளையர்கள் கைது

சர்வதேச நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். தகவல்களை திருடி பண மோசடியில் ஈடுபட்ட பல்கேரியாவை சேர்ந்த இருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்து உள்பட பல சர்வதேச நாடுகளின் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக் கூடிய கிரெடிட் கார்டுகளின் தகவல்களை திருடியதுடன் இந்தியாவிலும், பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்கேரியாவை சேர்ந்த பீட்டர் வேலிக்கோ மற்றும் லயன் மார்கோவா ஆகியோரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

இருவருடமிருந்து 10 லட்சம் ரூபாய், 45 போலி ஏடிஎம் கார்டுகள், ஒரு லேப்டாப், ஏடிஎம் கார்டு அளிக்கக் கூடிய இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஒரு மாதமாக தொடர் வங்கி மோசடியில், ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மோசடியின் பின்னணியில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version