வேளச்சேரியில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்கள் கைது

சென்னை வேளச்சேரியில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி லட்சுமி நகரில் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் தேவராஜ் என்பவர், தனது குடும்பத்துடன் கடந்த 12ம் தேதி உறவினர் வீட்டிற்கு சென்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து, வேளச்சேரி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வேளச்சேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் வேலு, சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தார்.

இந்தநிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 40 சவரன் தங்க நகைகள்,வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version